மூன்றாவது கலைஞர் சந்திப்பு!

உருவாக்கப்போகும் அமைப்பானது மிகவும் காத்திரமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் அதனை மேன்மேலும் வலுவுள்ளதாக அமைக்கப் பல உரையாடல்கள் நடத்தப்பட்டு, வருகைதந்தோரின் கருத்துகளை நன்றாகச் செவிமடுத்து அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டதோடு மாவட்டங்கள் தோறும் விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்ற விடயத்தில் அனைவரும் மிகவும் அக்கறையாக இருந்தனர்.

அந்தவகையில் முதலாவது கலைஞர் சந்திப்பு முள்ளியவளையிலும் இரண்டாவது சந்திப்பு மல்லாவியிலும் மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியிலும் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்து அதற்குரிய ஒழுங்குகளை வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் அவர்கள் மேற்கொண்டார்.

About the Author: admin