மேற்படி சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரதும் விருப்பின் அடிப்படையிலேயே இந்த அமைப்புக்குப் பெயரிடப்பட்டது. எமது நாட்டிற்குத் தொன்று தொட்டு வழங்கிவரும் “ஈழத் திரு நாடு” என்ற அடிப்படையில் “ஈழம்” என்ற சொற்பதத்துடன் ஆரம்பிக்கும்வகையில் “ஈழத் தமிழ்க் கலைஞர் ஒன்றியம்” என்ற பெயரிட்டு அதனை அழைப்பது என்றும்... Read more »
எமது பன்னிரெண்டாவது சந்திப்பு 17.12.2024 அன்று மாலை 5.30 மணியளவில் அம்பாறை பெரிய நீலாவணை சேக்கிழார் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து விடயங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
பதினொராவது சந்திப்பு 17.12.2024 செவ்வாய்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. அனைத்து விடயங்களும் உரையாடப்பட்டு அவர்கள் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
பத்தாவது கலைஞர் சந்திப்பு 17.12.2024 அன்று காலை 9 மணியளவில் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்கள மண்டபத்தில் நடைபெற்றது. கலைஞர்கள் கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
ஒன்பதாவது சந்திப்பு 15.12.2024 அன்று வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் மாலை 3 மணியளவில் நடைபெற்றது. பல கலைஞர்கள் கலந்துகொண்ட அவ் உரையாடலில் அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
எட்டாவது சந்திப்பு 15.12.2024 அன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கனில் சந்தை வளாகம் எண் – 14, 1 ஆம் மாடியில் அமைந்துள்ள சஹானா நுண்கலைக் கல்லூரிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அங்குள்ள கலைஞர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. Read more »
ஏழாவது சந்திப்பு 15.12.2025 அன்று காலை 7.45 அளவில் மன்னார் தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடத்தப்பட்டுக் கலைஞர்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டது. Read more »
மூன்றாவது சந்திப்பில் தீர்மானித்தபடி 4 வது 5 வது 6 வது சந்திப்பு 17.11.2024 அன்று பின்வரும் மூன்று இடங்களில் நடத்தப்பட்டது. 17.11.2024 அன்று காலை 10 மணியளவில் முள்ளியவளையில் கலியாணவேலவர் கோவில் மண்டபத்திலும், மாலை 2 மணியளவில் மல்லாவியிலுள்ள வர்த்தக சங்க மண்டபத்திலும்,... Read more »
உருவாக்கப்போகும் அமைப்பானது மிகவும் காத்திரமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் அதனை மேன்மேலும் வலுவுள்ளதாக அமைக்கப் பல உரையாடல்கள் நடத்தப்பட்டு, வருகைதந்தோரின் கருத்துகளை நன்றாகச் செவிமடுத்து அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டதோடு மாவட்டங்கள் தோறும் விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தமிழ் கலைஞர்களையும் உள்ளடக்கி அவர்கள் கருத்துகளையும்... Read more »
முதலாவது கூட்டத் தீர்மானத்துக்கு அமைய இரண்டாவது கூட்டம் 18.10.2024 அன்று நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. முதலாவது கூட்டத்துக்கு வராத பலர் இக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இரண்டாவது அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. எல்லா வகைக் கலைஞர்களையும் உள்ளடக்கியவாறு அவ்வமைப்பு அமைய வேண்டும் என்றும் அது... Read more »

